ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டு 'அச்சயன்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்ததாக மோகன்லாலுடன் 'ஒடியன்' என்கிற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரகாஷ்ராஜை தேடிவந்தது.
விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஏற்கனவே கோழிக்கோட்டிலும், வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பாலக்காட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் கலந்து கொண்டு நடித்து வரும் பிரகாஷ்ராஜ், 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில், தமிழில் 'இருவர்' படத்தில் மோகன் லாலுடன் நடித்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.