ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசின் திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி உட்பட இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் வரை எவரும் கலந்து கொள்ளாதது முதல்வருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது விழாவில் அவர் பேசிய பேச்சிலும் வெளிப்பட்டது..
“இந்த விழாவிற்கு முறைப்படி, சம்பிரதாயப்படி அழைப்பு அனுப்பவில்லை என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா, அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. இது உங்களுக்கான விழா, இதில் நீங்களே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால் எப்படி..?” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் முதல்வர் பினராயி விஜயன்.
இந்த விழாவில் கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்த விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில் நடித்த ரெஜிஷா விஜயனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் ஷோபனா, ரீமா கல்லிங்கல் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.