ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது, பாட்ஷாஹோ படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் அஜய் தேவ்கன். பாட்ஷாஹோ படம் வரும் செப்டம்பர் முதல் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனது வருங்கால படங்கள் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், நான் தானஜி, கேப்சுல் கில் படங்களை தயாரித்து வருகிறேன். சஞ்சய் தத்துடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். பரன் அக்தருடன் படம் ஒன்று பண்ண உள்ளேன். ஷிவாய் படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷூவல் எபெக்ட்ஸ், அப்படத்தில் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாக தானஜி படத்தில் செய்ய உள்ளோம்.
இது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை பற்றி சொல்லும் படம். அனேகமாக இது அனைத்து படங்களின் தாயாக இருக்கும். ஏன், பாகுபலியின் பிரம்மாண்டத்தை மிஞ்சும் விதமாக இருக்கும் என நினைக்கிறேன். தற்போது இப்படத்தின் பிரிபுரோடெக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறோம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளோம். பேட்டில் ஆப் ஷர்காரி படம் பற்றி வெகு காலத்திற்கு முன்பே அறிவித்தேன். ஆனால் அப்படத்தின் வேலைகள் துவங்கப்பட இன்னும் 2 இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார்.