ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விரும்புகிறேன், பைவ் ஸ்டார், கந்தசாமி படங்களை இயக்கிய சுசி கணேசன். 10 வருடங்குளுக்கு முன்பு தான் இயக்கிய திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார்.
பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிக்கிறார்கள், வித்யாசாகர் இசை அமைக்கிறார், பி.செல்லதுரை ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவற்றில் அமலா பால் படு கவர்ச்சியாக காட்டப்பட்டிருக்கிறார். இதுகுறித்து சுசி கணேசன் கூறியதாவது:
அமலாபாலுக்கு ஹோம்லியான முக அமைப்பு, உடலமைப்பு. சின்ன மாறுதல் செய்தால் அப்படியே கிளாமரான லுக்கிற்கு மாறிவிடுவார். இதுபோன்ற தகுதி ஒரு சில நடிகைகளுக்கே இருக்கும். அமலா பால் கிளாமராக நடித்திருக்கிறாரா என்பதை படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் தான் கூற வேண்டும். படத்துக்கு அவர் எப்படித் தேவையே அப்படி நடிக்க வைத்திருக்கிறேன். இணையதளங்களின் ஆதிக்கம் வந்த பிறகு கிளாமர், முத்தக் காட்சி, பிகினி உடை இவைக்கு பெரிய முக்கியத்தும் இல்லை என்று நினைக்கிறேன்.
திருட்டுப்பயலே முதல் பாகத்தின் சாயல் இரண்டாம் பாகத்தில் இருக்கும். அதாவது ஒருவரது ரகசியங்களை தெரிந்த கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்தல் என்ற விஷயம் இருக்கும். மற்றபடி முதல் பாகத்திற்கும், இதற்கும் தொடர்பில்லை. முதல் பாகத்தில் நான் விசாரணை அதிகாரியாக நடித்தேன். இதிலும் அப்படியே நடித்திருக்கிறேன். முதல் பாகம் வரும்போது பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்பாடு இல்லை, இப்போது இருக்கிறது. இப்படி சில மாற்றங்களையும் பதிவு செய்திருக்கிறேன். பாபி சிம்ஹாகாவுக்கு இந்தப் படம் நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்கிறார் சுசி கணேசன்.