ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி விட்டதை அடுத்து ஓவியாவை புதிய படங்களில் நடிக்க வைக்க பலரும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஏற்கனவே ஓவியா நடித்திருந்த சீனி படத்தை பெயர் மாற்றம் செய்து வெளியிட தயாராகி வருகிறார்கள். விஜய்யின் புதிய படத்திலும் ஓவியாவை நடிக்க வைக்க முருகதாஸ் முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களில் நடித்துள்ள ஓவியாவை, அரிமா நம்பி பட இயக்குனர் ஆனந்த் ஷங்கரும், தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். ஓவியா மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அதனால் அவரை எனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு உள்ளது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே நடித்த யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மீண்டும் ஓவியா நடிக்கிறார். கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓவியா உள்பட சில நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஓவியாவே முக்கிய நாயகியாக நடிக்கிறாராம்.