ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்துப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாக முன்னணி நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு நடந்து வருகிறது.
இதே போன்ற ஒரு சம்பம் நேற்று ஆந்திராவில் நடந்துள்ளது. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான சிருஜன் மற்றும் இயக்குனர் சலபதி ஆகியோர் ஒரு படம் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவரை அழைத்துள்ளனர். பீமாவரத்திலிருந்து ஐதராபத்திற்கு அவரை காரில் கதை சொல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
கார் விஜயவாடா அருகே சென்றபோது ஹீரோவும், இயக்குனரும் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களை எதிர்த்து போராடியுள்ளார் நடிகை. இதனால் கார் தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இதில் மூவருமே காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நடிகை கொடுத்த புகாரின் பேரில் இயக்குனர் சலபதியை போலீசார் கைது செய்தனர். ஹீரோ சிருஜன் தலைமறைவாகிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த நடிகை கூறும்போது... "அவர்கள் என்னை ஐதராபாத்துக்கு அழைத்த போது என்னிடம் கார் இருக்கிறது. நான் என் காரில் வருகிறேன் என்று சொன்னேன். அவர்கள் உன்னிடம் கதை சொல்ல வேண்டும் எங்களுடன் வா என்று அழைத்தார்கள். அதை நம்பி அவர்களுடன் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை ஒரே காரில் அழைத்துச் சென்றதன் நோக்கம் அதன் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. ஆபாசமாக பேசி என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். நான் அவர்களுடன் போராடினேன். கார் விபத்துக்குள்ளானதால் நான் தப்பித்தேன். இல்லாவிட்டால் என்னை அவர்கள் நாசம் செய்திருப்பார்கள். இதுபற்றி புகார் சொன்னால் உன் சினிமா கேரியரே அழிந்துவிடும் என்று மிரட்டினார்கள். அதையும் மீறி புகார் செய்திருக்கிறேன். அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை இதை விடமாட்டேன் என்றார்.