ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில், நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரால் நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வெர்டைகோ பாதிப்பு
கேரளாவில் உள்ள ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பிற்கு, வெர்டைகோ எனப்படும் காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்ற தன்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கிறுகிறுப்பு, தலை சுற்றல், நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும் உடல் நலம் சீராகவில்லை என்றே கூறப்படுகிறது.
வெறும் தரையில் பல நாட்கள் படுத்ததாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்டது. நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் நாளை முடிவடைகிறது. அவரது சார்பில் ஆஜராக உள்ள புதிய வழக்கறிஞர் ராமன் பிள்ள, ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.