ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் சொந்த வாழ்க்கையின் சங்கட நிகழ்வுகள் அவர்களது படங்களை எந்தவிதத்தில் பாதிக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. சல்மான் கான் விஷயத்திலும், சஞ்சய் தத் விஷயத்திலும் இதுபோன்ற கணிப்புகள் தவறாக போயுள்ளன. அவர்கள் தவறு செய்தார்கள் என்கிற வழக்கிற்கு பின்னால் வெளியான அவர்களது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய நிகழ்வுகளை நாம் தான் பார்த்திருக்கிறோமே.. ஆனால் அந்த இருவரின் வழக்கு விஷயத்தில் இருந்து மாறுபட்டது மலையாள நடிகர் திலீப்பின் விவகாரம். நடிகை விவகாரத்தில் கைதாகி சமீபகாலமாக சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் படம் தற்போதைய சூழலில் ரிலீஸானால் அதற்கு மக்களிடம் எந்த விதமான வரவேற்பு இருக்கும் என்கிற கேள்வி பலரிடமும் இருக்கிறது..
இதனாலேயே திலீப் நடிப்பில் தயாராகி கடந்த ஜூன் மாதமே வெளியாக வேண்டிய 'ராம்லீலா' படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது திலீப் சம்பந்தப்பட்டிருப்பது பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம் என்பதால், மக்கள் மனநிலை அவரது படங்களை எந்த விதத்தில் அணுகும் என்பதை கணிக்க முடியாமல் படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குப்பாடம் தவித்து வருகிறார்.
இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் இயக்குனர் அருண்கோபியோ, “நல்ல படத்தை எடுத்துள்ளோம்.. நல்லபடத்திற்கு மக்கள் ஆதரவு என்றுமே உண்டு.. இனி மக்கள் கையில் தான் எல்லாமே இருக்கிறது.. வேறு என்ன சொல்வது..?” என தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.