ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் திலீப் - பாவனா விவகாரம் இந்த அளவுக்கு சிக்கலானதற்கு அவரது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த திலீப், அதன்மூலம் கிடைத்த தொகைகளை தனது நண்பர்கள் மட்டுமல்லாது, சில நடிகைகளிடம் கொடுத்து வைத்திருந்தார் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நடிகை பாவனாவிடம் அதுபோன்ற கொடுத்து வைத்திருந்த பணம் மற்றும் சில சொத்துக்களை திரும்ப பெறுவதில் ஏற்பட்ட பிரச்சனைதான், நடிகை பாவனாவுக்கு அப்படி ஒரு மோசமான சம்பவம் ஏற்பட காரணமாகவும், நடிகர் திலீப் சிறை செல்ல காரணமாகவும் அமைந்தது என்பதே பரவலான கருத்தாக பேசப்படுகிறது..
இந்நிலையில் போலீஸார் விசாரணையில் திலீப்பின் பினாமி கணக்குகளில் இருந்து, குறுகிய காலத்தில் வளர்ந்த, திலீப்புடன் சில படங்களில் நடித்த ஒரு நடிகையின் கணக்கிற்கு நிறைய பணம் மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் அடிபட்டது. அப்போதே பலரின் கவனமும் நடிகை நமீதா பிரமோத்தின் பக்கம் தான் திரும்பியது. காரணம் அறிமுகமாகிய குறுகிய காலத்தில், குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் திலீப்புடன் மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நமீதா பிரமோத். சிலர் நமீதாவை பற்றி சாடைமாடையாக செய்திகளை பரப்ப ஆரம்பிக்க, தற்போது அவற்றை மறுத்து விளக்கம் அளித்துள்ளார் நமீதா பிரமோத்.
அதில், “ஒவ்வொவொரு துறையில் உள்ள பிரபலங்களும் இதுபோல ஏதாவது அபாண்டங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும் போல இருக்கிறது. இப்படி ஒரு செய்தி என்னைப் பற்றி வெளியான பின் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இதை சொல்கிறேன். எனக்கும் ஊடகங்களில் சொல்லப்படுவது போன்று வாங்கி கணக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடும் முன் அதனால் நாங்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாவோம் என்பதையும் நினைத்து பாருங்கள்” என கூறியுள்ளார் நமீதா பிரமோத்.
ஆனால் இதே நமீதா பிரமோத் தான், பாவனா விவகாரத்தில் திலீப்பின் பெயர் ஆரம்பத்திலேயே அடிபட்டபோதும் கூட, அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்காவில் திலீப்-காவ்யா மாதவன் கிட்டத்தட்ட ஒருமாத காலம் நடத்திய 'திலீப் ஷோ-2017'ல் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
தற்போது, தமிழில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தென்காசியில் நடைபெற்று வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் நமீதா பிரமோத்.