ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரேலி கி பார்பி. ஆயுஸ்மான் குராணா, கிர்த்தி சனோன் மற்றும் ராஜ்குமார் ராவ் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய ஆயுஸ்மானிடம், உங்களது மேரி பியாரி பிந்து படம் தோல்வியடைந்தது ஏன் என்று செய்தியாளர்களிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஆயுஸ்மான், "மேரி பியாரி பிந்து படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தன. சிலருக்கு படம் பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. மேலும் என்னுடைய ரிலீஸான நேரத்தில் பாகுபலி-2 படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் எனது படம் தோல்வியடைந்தது. ஒருவேளை பாகுபலி-2 ரிலீஸாகமால் இருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்" என்றார்.
பரேலி கி பார்பி படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.