ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவில் நல்லவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் நல்லவர்களாகவே இருப்பார்கள், கெட்டவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் கெட்டவர்களாகவே இருப்பார்கள் என்பது அந்தக் கால மக்களின் எண்ணமாக இருந்தது. வில்லன் நடிகர்களில் எந்த ஒரு கெட்டப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாத நடிகர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார்களோ இல்லையோ நிஜ வாழ்வில் ஹீரோவாக இருக்கிறார்கள்.
இந்தியத் திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ், தெலுங்கானா மாநிலத்தில் மெகபூப் நகர் மாவட்டத்தில் கொண்டரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்தக் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார். அந்தக் கிராமத்திற்காக பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.
ரம்ஜான் தினத்தன்று ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து அதை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார். சோட்டே மியான் என்பவர் மனைவி மூன்று மகள்களுடன் இடிந்த ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்திற்காக புதிய வீட்டை பிரகாஷ்ராஜ் அவருடைய அறக்கட்டளை மூலம் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த நிகழ்வில் கிராமத்து மக்களும் கலந்து கொண்டனர்.
“வாழ்க்கையை மீண்டும் திருப்பிக் கொடுத்த மகிழ்ச்சி” என்று இது பற்றி பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.