ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த பிப்ரவரியில் வெளியான 'எஸ்றா' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ் நடிப்பில், வரும் ஜூன்-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தியான்'. தனது சகோதரர் இந்திரஜித் மற்றும் நண்பர் முரளி கோபி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். வடமாநிலங்களில் வரலாற்று பின்னணி கொண்ட நகரங்களில் இதன் கதையும், கதைக்களமும் அமைந்துள்ளது. அதனால் இந்தப்படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் படத்தின் துவக்கத்திலும் அவ்வப்போது இடையில் சில இடங்களிலும் விளக்கப்படுத்தி கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல ஒரு கம்பீரமான பின்னணி குரல் தேவைப்பட்டது..
அந்தவிதமாக இந்தப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்திருப்பவர் சாட்சாத் மோகன்லாலே தான். பிருத்விராஜ் வைத்த வேண்டுகோளை ஏற்று மோகன்லால் இந்த உதவியை செய்துள்ளார்.. இதற்கு முன் மேஜர் ரவி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'பிக்கெட்-43' படத்திலும் மோகன்லால் வாய்ஸ் கொடுத்திருந்தார். அது மேஜர் ரவியின் நட்புக்காக, ஆனால் இந்தமுறை பிருத்விராஜ் படத்திற்கு வாய்ஸ் கொடுத்ததில் ஸ்பெஷல் காரணம் உண்டு.. ஆம்.. பிருத்விராஜ் டைரக்சனில் அடுத்ததாக 'லூசிபர்' என்கிற படத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதும், இந்த 'தியான்' படத்திற்கு கதையெழுதிய முரளிகோபி தான் அந்தப்படத்துக்கும் கதையெழுதி இருப்பதும் மோகன்லாலை எந்த மறுப்பும் சொல்லாமல் வாய்ஸ் கொடுக்க வைத்துவிட்டதாம்.