ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை சமந்தாவின் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டதால், கைவசமுள்ள படங்களை வேகமாக முடித்துக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்து முடித்து விட்டவர், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் உருவாகும் மகாநதி, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றும் ராம்சரணுடன் ரங்கஸ்தலம் 1985 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராம்சரணுடன் சமந்தா நடித்து வரும் ரங்கஸ்தலம் 1985 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தபோது சண்டை காட்சியில் நடித்த ராம் சரணுக்கு அடிபட்டது. இதனால் இரண்டு வாரங்களுக்கு அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னார்களாம். ஆனால், சமந்தா நேற்று முதல் கால்சீட் கொடுத்திருந்ததால், அவரது கால்சீட்டை வீணடிக்க முடியாது என்பதால் நேற்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார் ராம் சரண். இதையடுத்து ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் கேரளாவிலும் அடுத்தக்கட்டமாக படமாக்கப்பட உள்ளதாம்.