ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று முதல் ஆரம்பமான 39வது சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2 படம் சிறப்புத் திரையிடலாகத் திரையிடப்பட்டது. அத்துடன் பாகுபலி படத்தின் முதல் பாகம், குல்ஷன் குரோவர் நடித்துள்ள ஹிந்திப் படமான பேட்மேன், குஜராத்தி திரைப்படமான பே யார், அசாமிய திரைப்படமான கொத்தநோடி, கன்னடத் திரைப்படமான யு டர்ன், பெங்காலித் திரைப்படமான எ டெத் இன் குன்ச் ஆகிய இந்தியத் திரைப்படங்கள் இந்தியப் படப் பிரிவில் திரையிடப்படுகின்றன.
புகழ் பெற்ற ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் திரையிடலாக பாகுபலி 2 திரைப்படம் திரையிடப்பட்டது இந்தியத் திரையுலகத்திற்குக் கிடைத்த பெருமை. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மாஸ்கோ சென்றுள்ளார்.
“மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் இருப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. பாகுபலி 2 படத்தை முதலில் திரையிடத் தேர்வு செய்தது மிகவும் பெருமையாக உள்ளது,” என ராஜமௌலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜுன் 22ம் தேதி முதல் ஜுன் 29ம் தேதி வரை மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது. பல சர்வதேத் திரைப்பட விழாக்களில் பாகுபலி 2 பங்கு பெறுவதன் மூலம் அந்தப் படத்திற்கான புதிய வியாபார ஏரியாக்கள் உருவாகும், மேலும் இந்தியத் திரையுலகத்திற்கும் ஒரு பெருமை கிடைக்கும்.