ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபலமான இயக்குனர்கள் தங்களது அடுத்தடுத்த படத்தை இயக்குவதற்கு நிறைய இடைவெளிவிட்டால் என்னவெல்லாம் சந்திக்க நேரும் என்பதை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் படும் பாட்டை வைத்து தெரிந்துகொள்ளலாம். மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கவுள்ளார் என்பது தான் அதிகாரப்பூர்வமான விஷயம். ஆனால் இந்த செய்தி வெளியாகியே ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
அதனால், இப்போது என்ன செய்தி பரவி வருகிறது என்றால், அவர் மோகன்லாலின் மகன் படத்தை இயக்குவது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றும், அவர் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். அதற்கான ஸ்கிரிப்ட்டும் தயாராகி விட்டது என செய்திகள் உலா வருகிறது. இதனால் பதறிப்போன ஜீத்து ஜோசப், தான் தற்போது பிரணவ் மோகன்லாலின் ஸ்கிரிப்ட்டில் மட்டும் தான் கவனம் செலுத்துவதாகவும், 'த்ரிஷ்யம்-2' பற்றி வரும் செய்திகளில் உண்மை ஏதும் இலை என தெளிவுபடுத்தியுள்ளார்.