ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு கைதி நம்பர் 150 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், தற்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாறு கதையை ஓகே செய்தார். நடிகர் ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். செட் வேலைகளை ராஜீவன் தொடங்கி விட்டார்.
இந்த படம் குறித்து சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில், சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடிப்பது பெருமையாக உள்ளது. அதோடு இந்த படத்தை முதலில் தமிழ், தெலுங்கில் தான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திரப்போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டியைப் பற்றி இந்தியா முழுக்க உள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.