மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கசபா' என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து சமுத்திரக்கனி மலையாளத்தில் இயக்கும் 'அப்பா' ரீமேக்கான 'ஆகாச மிட்டாயி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினார்.. ஆனால் விலகியதும் ஒருவகையில் நல்லதற்குத்தான் என்பது போல மீண்டும் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியை தேடி வந்தது..
மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் என்பவர் இயக்கம் இந்தப்படத்தில் மம்முட்டி ஸ்ட்ரிக்ட்டான காலேஜ் புரபெஷராக நடிக்க, ஐ.பி.எஸ் அதிகாரி பவானி துர்கா வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.. கல்லூரியில் மாணவர்களின் இரு பிரிவுகளுக்குள் ஏற்படும் மோதலை தொடர்ந்து வரலட்சுமி கல்லூரிக்குள் நுழையவேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அதை தொடர்ந்து அவர் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுமாக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். 'புலி முருகன்' என்கிற சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.