கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தெலுங்கு சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் கே.விஸ்வநாத்துக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த விருது அவருக்கு தாமதாக வழங்கப்பட்டிருப்பதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்ட கே.விஸ்வநாத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னார் சிரஞ்சீவி. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கே.விஸ்வநாத் மகத்தான படைப்பாளி, அவர் தெலுங்கு சினிமாவின் சொத்து. அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விருது அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஆயினும் அதற்கான காரணத்தை தேட விரும்பவில்லை. இந்த தருணத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால் தாதா சாஹேப் பால்கே விருது முழுமை அடைந்திருக்கிறது. அவருக்கு கிடைத்த விருதால் தெலுங்கு திரையுலகம் பெருமை கொள்கிறது. அவரது குடும்ப நணபர் என்ற முறையில் எங்கள் குடும்பமும் பெருமை கொள்கிறது. என்றார்.