ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
தெலுங்கு சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் கே.விஸ்வநாத்துக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த விருது அவருக்கு தாமதாக வழங்கப்பட்டிருப்பதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்ட கே.விஸ்வநாத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னார் சிரஞ்சீவி. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கே.விஸ்வநாத் மகத்தான படைப்பாளி, அவர் தெலுங்கு சினிமாவின் சொத்து. அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விருது அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஆயினும் அதற்கான காரணத்தை தேட விரும்பவில்லை. இந்த தருணத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால் தாதா சாஹேப் பால்கே விருது முழுமை அடைந்திருக்கிறது. அவருக்கு கிடைத்த விருதால் தெலுங்கு திரையுலகம் பெருமை கொள்கிறது. அவரது குடும்ப நணபர் என்ற முறையில் எங்கள் குடும்பமும் பெருமை கொள்கிறது. என்றார்.