ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வரும் ஏப்-28ஆம் தேதி 'பாகுபலி-2' மிக பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. கேரளாவிலும் 'பாகுபலி' ஜுரம் அதிகமாகியுள்ளதால் வழக்கத்தை விட அதிகமாக, சுமார் 300 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபாஸ், நேற்று கேரளாவில் கொச்சியில் உள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து 'பாகுபலி-2' குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கமால் ரஷீத் கான் என்கிற பாலிவுட் நடிகர், 'மகாபாரதம்' படத்தில் பீமனாக மோகன்லால் நடிப்பதை கிண்டலடித்ததுடன் பீமனாக நடிக்க பிரபாஸ் தான் பொருத்தமான தேர்வு என்றும் மேதாவித்தனமாக கூறியிருந்தார். இதுபற்றி பிரபாஸிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர்..
அதற்கு பதிலளித்த பிரபாஸ், “சந்தேகமே இல்லாமல் மோகன்லால் ஒரு மிகச்சிறந்த நடிகர்.. ஒருவேளை அவரால் ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க இயலாமல் ஏதாவது ஒரு படத்திலிருந்து விலகினார் என்றால் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.. இதிலிருந்து மோகன்லாலுக்கு பின்னர்தான் தன்னைப்போன்றவர்கள் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்றே தெரிகிறது.