ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல மலையாள எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தின் ஒரு பகுதியாக எழுதிய ரண்டமூழம் நாவல் 'மகாபாரதம்' என்கிற பெயரில் சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முழுக்க பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதை நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதாம். இதில் பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.. விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்த படம் பற்றி ஸ்ரீகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இந்த கதையில் பீமன் பற்றிய கதாபாத்திரத்தை நான் மனதில் உள்வாங்கும்போது அது மோகன்லால் உருவமாகத்தான் என் மனதில் பதிந்தது. ஒருவேளை அப்படி வேறு ஒருத்தர் தான் பீமனாக நடிக்கவேண்டும் என்கிற சூழல் உருவாகி இருந்தாலோ, அல்லது மோகன்லால் நான் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தாலோ, இந்த ஸ்கிரிப்ட்டை அப்படியே எம்.டி.வாசுதேவன் நாயரிடம் திருபிக்கொடுத்திருப்பேன். காரணம் மோகன்லாலை தவிர வேறு யாரையும் பீமனாக நினைத்து பார்க்க என்னால் முடியவில்லை” என கூறியுள்ளார் ஸ்ரீகுமார் மேனன்.
மேலே படத்தில் பீம்ணனின் உருவத்தில் உள்ள மோகன்லாலின் தோற்றம் மோகன்லால் ரசிகர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்டதாகும்.