ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்.. அதாவது தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் அடியெடுத்து வைத்த சமயம்.. அவரது இரண்டாவது படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை மந்த்ரா. இங்கே தமிழில் விஜய், அஜித் படங்களிலும் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் ராசி என்பது தான் பெயர். சமீபத்தில் பவன் கல்யாணை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார் மந்த்ரா. திடீரென இவர் பவன் கல்யாணை சந்தித்ததன் காரணம் பற்றி அவரே கூறியுள்ளார்.
தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு பவன் கல்யாணை சந்திக்க வந்தாராம் மந்த்ரா. அவர் வந்துள்ள விஷயம் கேள்விப்பட்டு வாசலுக்கே வந்து உள்ளே அழைத்துசென்ற பவன் கல்யாண், குழந்தையை தனது மடியில் வைத்து விளையாடிபடியே சுமார் அரைமணி நேரம் மந்த்ராவுடன் பழைய விஷயங்கள், குடும்ப நிலவரங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தாராம்.
மந்த்ரா குழந்தையின் பிறந்தநாளை சாக்காக வைத்துக்கொண்டு பவன் கல்யாணை சந்திக்க வந்தாலும், அவர் வந்தது வேறொரு விஷயமாகவாம். மந்த்ரா தான் தற்போது தயாரித்து வரும் 'லங்கா' என்கிற படத்திற்கு பவன் கல்யாணின் ஆதரவை கேட்டு தான் வந்தாராம். நாளை (ஏப்-21) இந்தப்படம் ரிலீஸாகிறது. பவன் கல்யாண் தனக்கு ஆதரவு அளிப்பது தெரிந்தால் பணம் போட்ட பைனான்சியர்கள் சற்றே மரியாதையாக இன்னும் கொஞ்சநாள் காத்திருப்பார்கள் என்றும், படத்திற்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பவன் கல்யாணை சந்தித்தாராம் மந்த்ரா என்கிற ராசி.