விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் முதன்முறையாக பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் திரைப்படம் டான் கதையை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என கூறப்படுகின்றது. மேலும் பாலகிருஷ்ணா - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படமான ஜான்விக் படத்தின் ரீமேக் என்றும் சிரஞ்சீவி நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்குவதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட ஆட்டோ ஜானி திரைப்படம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இவற்றை இயக்குனர் மறுத்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் ரோக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பாலகிருஷ்ணாவின் 101வது படத்தை தான் இயக்குவது பெருமையாக இருப்பதாகவும் இப்படம் ரீமேக் படமோ அல்லது ஏற்கனவே கைவிடப்பட்ட திரைப்படத்தின் திரைக்கதையைக் கொண்டதோ அல்ல என்று கூறினார். மேலும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த புதுமுக நடிகை முஷ்கான் நடிப்பதாகவும் பூரி ஜெகன்நாத் கூறினார். மூன்று நாயகிகள் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.