ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி 2 படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதை அடுத்து, உற்சாகமாக இருக்கிறார் தமன்னா. முதல் பாகத்தில், இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததால், இரண்டாம் பாகத்தில், அனுஷ்காவுக்கு தான், அதிக காட்சிகள் உள்ளதாக, முன் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மறுக்கிறார் தமன்னா.
'இரண்டாம் பாகத்திலும், எனக்கு முக்கியத்துவம் உள்ளது. வாள் சண்டை, குதிரை சவாரி, ஆக்ரோஷமான மோதல் என, பின்னி பெடலெடுத்திருக்கிறேன். இதற்காக முறைப்படி பயிற்சியும் பெற்றிருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமானால், இரண்டாம் பாகத்தில் தான், என் திறமைக்கு அதிக வேலை கிடைத்துள்ளது' என்கிறார்,
அவர். மேலும் அவர் கூறுகையில், 'ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தெரிந்த நடிகையாக இருந்த என்னை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு தெரியவைத்தது, பாகுபலி தான்' என்கிறார்.