ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவரை தவறான வார்த்தைகளால் விமர்சித்து இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன் என்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன். அதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒரு செய்தி சேனலில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என் இசையில் உருவான பாடல்களை பாடக்கூடாது என்று இளையராஜா கூறியுள்ளாரே? என்று கங்கை அமரனிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர், ஒரு தன்மையாக பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சொன்னது முட்டாள்தனமானது, மடத்தனமானது, இதற்கு மேல சம்பாதிச்சு என்ன பண்ணப்போறாரு, திங்கிறது ரெண்டு இட்லி, ரெண்டு சப்பாத்தி என்று தனது பாடிலாங்குவேஜை அருவருப்பாக வைத்தபடி பதில் சொல்கிறார்.
பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே -என்ற பாடலை இளையராஜா இசையில் எழுதினார் கங்கைஅமரன். அந்த பாடல் ஹிட்டடித்த பிறகுதான் அவர் உலகத்துக்கு தெரிந்தார். ஆக, அவரை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் இளையராஜா. அப்படிப்பட்ட உலகமே வியக்கும் இசைஞானியை இவர் அப்படி சொல்லலாமா? இப்படிப்பட்ட அண்ணனை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும்.
மேலும், எஸ்.பி.பி., பாடக்கூடாது என்று இளையராஜா சொல்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால் அது சரியா தவறா என்பதை நீதிமன்றத்தில் சொல்லப் போகிறார்கள். அதுவேற விசயம். ஆனால், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை யமைத்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு இசைமகானை அவர் அந்த மாதிரி வார்த்தைகளால் பேசியது கண்டனத்திற்குரியது. என்னைப்போன்ற கோடான கோடி இசைஞானி ரசிகர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுத்துள்ளது.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். ஆனால் இவர் ஆள் சேர்த்து வந்து அடிப்பார் போலிருக்கு. அந்த அளவுக்கு விவகாரமாக பேசுறாரு கங்கை அமரன் -என்று தனது ஆதங்கத்தை சொல்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன்.