ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை மிக வலுவான கேரக்டரை கொண்ட ஸ்கிரிப்ட்டை உருவாக்கும் எந்த இயக்குனருக்கும் மோகன்லாலை நடித்தால் நன்றாக இருக்குமே, அவரை அணுகித்தான் பார்ப்போமே என்பதுதான் விருப்பமாக இருக்கும்.. ஆனால் அப்படி எத்தனை கதைகளை கேட்பதற்கு மோகன்லாலுக்கு நேரமிருக்கும்.. அதையும் தாண்டி எத்தனை பேருக்கு மோகன்லால் வாய்ப்பு தந்துவிட முடியும்..? நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் 'வீரம்' படத்தின் இயக்குனர் ஜெயராஜுக்கும் அந்த அனுபவம் தான் நடந்துள்ளது..
பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய இந்த வீரம் படத்தில் பாலிவுட் நடிகரான குணால் கபூர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். அதனால் மலையாளத்தில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இந்தப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் கதை நாயகனாக 'சந்து சேகவர்' என்கிற வரலாற்று கேரக்டரில் மோகன்லால் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்து, அவரிடம் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்துவிட்டு வந்தாராம் ஜெயராஜ்.. “ஆனால் அதன்பிறகு பல மாதங்களாக மோகன்லால் எந்த ஒரு பதிலும் சொல்லவே இல்லை.. அதனால் தான் குணால் கபூரை ஹீரோவாக்கி படத்தை எடுத்தேன்” என வருத்ததுடன் கூறியுள்ளார் ஜெயராஜ்..