ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கைதி நம்பர் 150' படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கொடி நாட்டி, எப்பொ௯தும் நான் ராஜா தான் என்பதை நிரூபித்துள்ளார் மெகாஸ்டார் சிரஞ்சீவி. சினிமாவுக்குள் மீண்டும் நுழைந்துவிட்டாலும் தற்போது தொலைக்காட்சியில் தான் நடத்திவரும் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்கிற நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் சிரஞ்சீவி.. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்டோ ட்ரைவரான இளைஞர் சதீஷின் ஆட்டோவில் அமர்ந்து பயணித்து ரசிகர்களையும் பொதுமக்களையும் வாய்பிளக்க செய்துள்ளார் சிரஞ்சீவி.
கோடீஸ்வரர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதீஷுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லையென்றாலும் மிகுந்த ஊக்கத்துடன் பதிலளிப்பதையும் அவர் தொழிலில் அவர் நேர்மையாக செயல்படுவதையும் பார்த்த சிரஞ்சீவி அதனாலேயே சதீஷின் ஆசையை நிறைவேற்றி வைத்தாராம். அதுமட்டுமல்ல தனது சொந்த பணத்தில் இருந்து சதீஷுக்கு இரண்டு லட்ச ரூபாயும் வழங்கினாராம். இந்தப்போட்டியில் கலந்துகொண்ட சதீஷ் ஏற்கனவே 1.40 லட்ச ரூபாய் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.