ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பை மாடலாக தன் கேரியரை தொடர்ந்தவர் குஜராத்தைச் சேர்ந்த பிரியல் கோர். வெற்றிகரமான மாடலாக வலம் வந்தவர் 2010ம் ஆண்டில் இஷான் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது இந்தி சின்னத்திரை உலகின் முன்னணி நாயகி. இதுவரை 10 பிரமாண்ட தொடர்களில் நடித்தவர். தற்போது இச்சாபியாரி நாகினி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜஸ்ட் யூ அண்ட் மீ என்ற பஞ்சாபி படத்திலும், சாபே சுப்ரமண்யம் என்ற தெலுங்கு படத்திலும், அனார்கலி என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் இந்தியில் நடித்து வரும் இச்சாபியார் நாகினி பாலிமர் தொலைக்காட்சியில் பிரியமுடன் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பிரியல் கோர் நாகினியாக நடிக்கிறார்.
காமெடி மற்றும் திகில் கதையாக இந்த தொடர் நகர்கிறது. மந்திரவாதியும், நாகினியும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாகினியாக நடிக்கும் பிரியல்கோரின் அழகுக்கும், நடிப்புக்குமாகவே பெண்கள் டி.வி.முன் உட்காருகிறார்கள். விரைவில் தமிழ் சினிமாக்களிலும் பிரியல் கோரை பார்க்கலாம் என்கிறது சேனல் வட்டாரம்.