ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்த கத்தி படத்தை அடுத்து அகிரா இந்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகுல்ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். துப்பாக்கி படத்தை போன்று ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு முதலில் வாஸ்கோடகாமா என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், பின்னர் அந்த செய்தியை மறுத்தார் முருகதாஸ். அதையடுத்து டைட்டீலை பிறகு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பில் இறங்கினார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஏஜென்ட் சிவா என்ற தலைப்பை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அதற்கு மறுப்பு சொல்லாத ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் தலைப்பு இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இருப்பினும், இந்த தலைப்பைதான் அவர் உறுதி செய்து வைத்திருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.