ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள இயக்குனர் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் வித்யாபாலன். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இந்தி, மலையாளம் என இருமொழிப்படமாக உருவாவதாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வித்யாபாலன்..
இப்போதைய சூழலில் கமலா சுரையாவாக நடிக்க வித்யா பாலனை விட்டால் வேறு ஆள் இல்லைதான்.. ஆனாலும் இந்தக்கதையை உருவாக்கும்போதே இயக்குனர் கமலின் மனதில் இந்த கதாபாத்திரமாக வந்து அவ்வப்போது நிழலாடிய முகம் யார் தெரியுமா..? மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தான்.. அவரை மனதில் வைத்து தான் இந்தக்கதையை உருவாக்க ஆரம்பித்தாராம் இயக்குனர் கமல்.. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரை காலன் கொண்டுபோய்விட, இப்போது இந்த அரிய வாய்ப்பு வித்யாபாலனுக்கு கிடைத்துள்ளது.