ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ஐஎஸ்எம் எனும் சமூக அக்கறை கொண்ட படத்தில் நாயகனாக நடித்த கல்யாண் ராம், அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். நாக சௌரியா நாயகனாக நடிக்க, “அப்பேயிதோ அம்மாயி” எனும் படத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவிற்கு அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இருப்பினும் ரமேஷ் கூறிய குடும்ப சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து திரைக்கதை கல்யாண் ராமை வெகுவாக கவர்ந்து விட்டதால் ரமேஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரவி தேஜாவின் பெங்கால் டைகர் படத்தை தயாரித்த ராதா மோகன் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக சின்னி ராமைய்யா என பெயரிட்டுள்ளனர். குறைந்த பட்ஜெடில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.