மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கிரிக்கெட்டில் பெரும்பாலும் சச்சின் சாதனையை சச்சினே முறியடிப்பார் என்று முன்பு சொல்லப்படுவதுண்டு.. அதுபோல மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து முதலிடத்தில் இருந்த மோகன்லால், இப்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.. ஆம்.. அவரது முந்தைய த்ரிஷ்யம் படத்தின் மொத்த கேரள கலெக்சனை சமீபத்தில் வெளியான அவரது இன்னொரு படமான புலி முருகன் முறியடித்துள்ளது.. இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கணக்கும் உண்டு..
அதாவது இதுநாள் வரையிலான கேரளா சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனை செய்திருந்த த்ரிஷ்யம் படம் 190 நாட்களில் சுமார் 44 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. ஆனால் வெளியான 17 ஆம் நாளிலேயே சர்வசாதாரணமாக கேரளாவில் மட்டும் 45 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிட்டது புலி முருகன்.. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் புலி முருகன் படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னர் வெளியான மோகன்லாலின் இன்னொரு படமான ஒப்பம் படமே த்ரிஷ்யம் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது..
அதற்கேற்றவாறு அந்தப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதன் தற்போதைய கேரள வசூல் நிலவரம் 38.36 கோடி ரூபாயைத்தான் எட்டியுள்ளது.. இருந்தாலும் இன்னும் சில நாட்களில் ஒப்பம் படமும் த்ரிஷயம் சாதனையை ஓவர்டேக் செய்துவிடும் என்பது உறுதி. அந்தவகையில் கேரளா சினிமாவின் முதல் மூன்று வசூல் ரெக்கார்டுகளும் இனி நீண்ட நாட்களுக்கு மோகன்லால் கைவசம் தான் இருக்கப்போகின்றன.. அதற்கடுத்த இடங்களில் பிருத்விராஜின் என்னு நிண்டே மொய்தீன் மற்றும் நிவின்பாலியின் பிரேமம் படங்கள் சாதனை வரிசையில் நிற்கின்றன.