ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகில் முக்கிய நடிகையாக மிக விரைவாக வளர்ந்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், ராம் சரணுடன் துருவா திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு திரைப்படம், சாய் தரண் தேஜுடன் பெயரிடப்படாத திரைப்படம் என பிசியாக நடித்து வருகின்றார். இதில் மகேஷ் பாபிற்கு நாயகியாக நடிக்கும் படத்தின் முற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் மகேஷ் பாபுவுடன் ராகுல் ப்ரீத்தி சிங்கும் பங்கேற்க துவங்கியுள்ளார். இப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பில் பங்கேற்ற ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.
ஆனால் இதுப்பற்றி விளக்கம் அளித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங், படப்பிடிப்பின் போது கையில் சிறு காயம் ஏற்பட்டதாகவும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நலம் விரும்பிகளுக்கும் ராகுல் ப்ரீத்தி சிங் நன்றி தெரிவித்துள்ளார்.