ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக, இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண் கேரக்டரில் நடித்த ராகினி நந்த்வனியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? 'டேராடூன் டைரி' என்கிற இந்திப்படம் மூலமாக அறிமுகமான இவர்தான், இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படத்திலும் நடித்தவர்... அதைத்தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் இருந்தவருக்கு 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் வாய்ப்பு வந்து கடைசியில் ஏனோ தட்டிப்போனது..
இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் சான்ஸ் தேடி வந்திருக்கிறது. படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டும் இருக்கிறார் ராகினி. படத்தின் பெயர் 'ஹதியா'.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், 'பெருச்சாளி' மலையாளப்படம் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் தான் நடந்தது.. அதனால் கேரளாவின் அழகை தரிசிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தவருக்கு இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே கேரளாவில் நடைபெறுவதால் அந்த மனக்குறை நீங்கியுள்ளது.. கேரளா இவ்வளவு அழகா என வியந்து போயிருக்கிறார் ராகினி.