ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ராஜ்தாக்ரேயின் நவநிர்மான் சேனா மிரட்டல் விடுத்துள்ளது. இது இந்திய கலைஞர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் இதுகுறித்து அங்குள்ள நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது: இசைக்கு நாடு கிடையாது, மொழி கிடையாது, நேரம் கிடையாது, காலம் கிடையாது, எதுவுமே கிடையாது, இசை இசைதான். இசை எல்லைகளை கடந்தது அதற்கு எல்லைகளே கிடையாது என்றார். பாகிஸ்தான் கலைஞர்களை வெளியேற்றக்கூடாது என்ற கருத்தை தன் பாணியில் இப்படி கூறினார் இளையராஜா.
ரகுமான் கேள்விக்கு கடுப்பு : பின்னர் இளையராஜாவிடம் "ஏ.ஆர்.ரகுமானின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டபோது கோபமாக இளையராஜா அளித்த பதில்: இந்த கேள்விளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். அதே கருத்துடன் நானும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்ககூடாது என்றார்.