மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாள நடிகை அனுஸ்ரீயை தெரியுமா..? நூறு ரூபாய் வாங்கினால் அந்த நூறு ரூபாய்க்கு மட்டும் கரெக்டாக நடிக்கும் மிகச்சிறந்த நடிகை... ஆஹா, ஓஹோ என சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகை இல்லாவிட்டாலும் முக்கியமான படங்களில் முக்கியமான கேரக்டர்களில் இவரை பார்க்க முடியும். சமீபத்தில் வெளியான 'ஒப்பம்' படத்தில் மோகன்லாலுக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.. சில தினங்களுக்கு முன் வெளியூர் படப்பிடிப்புக்கு கிளம்பியவர் போகிறபோக்கில் விமான நிலையத்தில் சாப்பிட்டு கொள்ளலாம் என வந்துவிட்டார்..
கொச்சி விமான நிலையத்தில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் ஒரு காபி, ஒரு டீ இரண்டு சிக்கன் பப்ஸ் சாப்பிட்டவரிடம், 680 ரூபாய் பில் தொகையாக நீட்டப்பட அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.. என்னதான் நடிகையாக வசதியாக இருந்தாலும், சாப்பிட்ட பொருட்களுக்கு பல மடங்கு கூடுதல் கட்டணம் என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.. அந்த பில்லை தானே பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, “விமான நிலையத்திற்கு வந்துபோகும் சாதாரண பயணிகளையும் மனதில் வைத்து, இதுபோன்ற விலைக்கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார் அனுஸ்ரீ. அனால் சோஷியல் மீடியா ட்ரோல் மன்னர்கள் இதைவைத்து அனுஸ்ரீயை கலாய்க்க ஆரம்பித்துவிட்டது தனிக்கதை.