ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி -என்ற பாடல் உலகமெங்கிலும் பிரபலமாகி அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, வேதாளம் என பல படங்களில் சூப்பர் ஹிட பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானார் அனிருத். அதனால் விரைவில் அவர் ரஜினி படத்திற்கும் இசையமைத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரஜினி நடித்த கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளரானார். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் அஜீத் தின் 57-வது படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் இசையமைக்க விடாமுயற்சி செய்ததின் காரணமாக அவருக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறதாம். தற்போது அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.