ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெத்து பில்ட்-அப்பில்தான் பல ஹீரோக்களின் வண்டியே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரேயொரு படத்தில் நடித்த புதுமுக நடிகர்கள் கூட தன்னுடைய முதல் படம் வெளியாகும் தினத்தில் அகில இந்திய ரசிகர் மன்றம் ஆரம்பித்து போஸ்டர் ஒட்டிக்கொள்வதெல்லாம் இந்த ரகம். புதுமுக நடிகர்களின் லந்து இப்படி என்றால், சில பிரபல நடிகர்களின் அலப்பரை வேறு மாதிரி. 10 ஆயிரம் செலவு செய்து சில மாணவர்களுக்கு நோட்புக் வாங்கிக் கொடுத்துவிட்டு, என்னவோ என்ஜினியரிங் சீட் வாங்கிக் கொடுத்ததுபோல் தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் பப்ளிசிட்டி தேடிக் கொள்வார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் நேர்மையான நடிகராக இருந்துவருகிறார் விஜய்சேதுபதி. நடிகர் விஜய்சேதுபதியின் எளிமையும், நேர்மையாயும் தான் அவரது பலம். இந்த நற்பண்பை நிரூபிக்கும் வகையில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதாவது, ‛‛இணையதளம் ஒன்றில், விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தர்மதுரை'. இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அப்படியே ஏழை குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துவிட்டார். இதை அறிந்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். என்றொரு செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்த செய்தி எப்படியோ விஜய்சேதுபதியின் கவனத்துக்குப் போயிருக்கிறது. அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''இந்த செய்தி உண்மையல்ல... மன்னிக்கவும்!'' என நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். அவரின் இந்த நேர்மையை பலரும் பாராட்டி கமென்ட் செய்து வருகின்றனர்.