விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி கைதி எண் 150 எனும் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தில் சமந்தா வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கின்றார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் திரைப்படம் என்பதாலும் அவரது 150வது திரைப்படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதனால் மிக அதிக தொகைக்கு இப்படத்தின் விநியோக உரிமைக்கான விற்பனை நடைபெற்று வருவதாகவும், அதிக விலை கொடுக்கும் விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படுவதாகவும் செய்திகள் பரவின. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராம் சரண் இவை உண்மைக்கு புறம்பான தகவல் என்று மறுத்துள்ளார். மேலும் இப்படத்தின் விநிநோக உரிமைக்கான வியாபாரம் இன்னும் துவங்கவில்லை என்றும் ராம் சரண் கூறியுள்ளார்.