ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தான் 'பேபி'. இந்திய உளவாளிகளை மையப்படுத்தி இதுநாள்வரை உருவாகியிருந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பலராலும் பாராட்டப்பட்டது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக இதன் தொடர் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக, இதன் ப்ரீக்வல் எனப்படும் முன்கதையைத்தான் இரண்டாம் பாகமாக உருவாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதன் முதல் பாகத்தில் நடித்திருந்த ராணா டகுபதி இந்த ப்ரீக்வலில் இடம்பெறவில்லையாம். அதே சமயம் முதல்பாகத்தில் இடம் பெற்ற டாப்சி இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுகிறாராம். புதிய அம்சமாக இந்த இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜும் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது. அய்யா, ஔரங்கசீப் ஆகிய படங்களை தொடர்ந்து பிருத்விராஜ் பாலிவுட்டில் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். அதுமட்டுமல்ல இந்த இரண்டாம் பாகத்தை நீரஜ் பாண்டே தயாரிப்பதோடு நின்றுகொள்ள, வேறு ஒருவர் படத்தை இயக்கவுள்ளாராம்.