ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் வெளியாகும் படங்களில் பெரும்பாலான படங்கள் இரண்டு வாரங்களைக் கடப்பதே தற்பேது மிகப் பெரிய கேள்வியாக உள்ள சூழ்நிலையில் இரண்டு புதிய படங்கள் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளன. ஜுலை 1ம் தேதி வெளியான 'அப்பா, ஜாக்சன் துரை' ஆகிய இரண்டு படங்களும் நாளை 25வது நாளைக் கொண்டாட உள்ளன. ஆனால், ஒரு நாள் முன்னதாகவே இன்றே அந்த 25வது நாளை படக் குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.
சமுத்திரக்கனி இயக்கம் நடிப்பில் கதையை மட்டுமே நம்பி வந்த படமான 'அப்பா' படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரிய ஹீரோக்கள் நடித்த கமர்ஷியல் படங்களுக்கு நிகராக இந்தப் படமும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. நல்ல படங்களை அனைவரும் ரசிக்கும் விதத்தில் சரியாகக் கொடுத்தால் அந்தப் படத்தை ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என்பதற்கு இந்தப் படம் சரியான உதாரணம்.
25வது நாளைத் தொடும் மற்றொரு படம் 'ஜாக்சன் துரை'. தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன் மற்றும் பலர் நடித்த இந்தப் படமும் வழக்கமான பேய்ப் படம்தான். ஆனால், பேயைக் கண்டு பயப்படாத படமாக நகைச்சுவையை அதிகம் கலந்து கொடுத்ததால் இந்தப் படம் வெற்றி பெற்றது. 'பர்மா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் தரணிதரனுக்கு அந்தப் படம் கொடுக்காத வெற்றியை 'ஜாக்சன் துரை' கொடுத்துவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் 'தெறி' 100வது நாள், 'கபாலி' வெளியீட்டு நாள், இன்று இரண்டு படங்களின் 25வது நாள் என இந்த வாரம் தமிழ் சினிமா கொஞ்சம் மகிழ்ச்சியாகவே முடிகிறது.