ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அரசியல் பிரவேசம் காரணமாக சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் விஜய்யின் கத்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இது சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஹீரோயின் தான் இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, கத்ரீனா கைப், நர்கீஸ் பக்ரி, பரிணிதி சோப்ரா என பல நடிகைகளிடம் நடிக்க கேட்டுவிட்டனர். ஆனால் இவர்களும் எல்லோரும் கால்ஷீட் இல்லை இல்லை என்று சொல்லியே தட்டி கழித்து வருகின்றனர். இறுதியாக தெலுங்கில் நடிகை அனுஷ்காவிடம் பேசினர், அவரும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சிரஞ்சீவி படத்திற்கு ஹீரோயின் தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.