ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் எந்திரன். பின்னர் அதை பாகுபலி முறியடித்தது. தற்போது இந்த இரண்டு படங்களை முறியடிக்கும் வகையில் பாகுபலி-2 இன்னும் பிரம்மாண்டமாகவும், 2.O அதைவிட பிரம்மாண்டமாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி-2 படமும், 2.O படமும் ஒரேநாளில் ரிலீஸாகப்போவதாக செய்தி வந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் பாகுபலி-2 வில்லனான ராணா.
இதுகுறித்து அவர் கூறியதாவது... ‛‛2.O படம், பாகுபலி-2வுடன் கண்டிப்பாக மோதாது. 2.O படத்தின் ஷூட்டிங் மட்டுமல்ல, விஷூவல் பணிகளும் அதிகம் இருக்கிறது. பாகுபலி படம் வரலாற்று படம், அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி பாகுபலி-2 ரிலீஸாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.