'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
நேற்றைய தினம் மலையாள நடிகர் சங்கம் (AMMA) தனது பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. நடிகர்சங்கத்தலைவரும் நடிகரும் எம்.பியுமான இன்னொசன்ட் தலைமையில் கூடிய இந்தக்கூட்டத்தில் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். ஆனால் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களான தேசியவிருது பெற்ற நடிகர் சலீம் குமார் மற்றும் சமீபத்தில் பத்தனாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெகதீஷ் ஆகிய இருவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்..
நடிகரும் எம்.எல்.ஏவுமான கணேஷ்குமாரை (படத்தில் மோகன்லாலின் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்) ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த மோகன்லாலின் செயலை கண்டித்து நடிகர்சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தார் சலீம்குமார். அதனால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகர் ஜெகதீஷுக்கும் கிட்டத்தட்ட இதே காரணம் தான்.. மோகன்லால் தனது நண்பர் தான் என்றாலும், தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட கணேஷ்குமாருக்கு ஆதரவாக மோகன்லால் பிரச்சாரம் செய்ததால் மன வருத்தத்தில் இருந்ததாலும், தனக்கு ஆதரவாக பேசிய சலீம்குமாரே ராஜினமா செய்துவிட்டதாலும் தான் மட்டும் எதற்காக நடிகர்சங்க கூட்டத்திற்கு போகவேண்டும் என வருகை தராமல் இருந்துவிட்டதகவும் சொல்லப்படுகிறது.