ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் பெரும்பாவூர் பகுதியை செந்த சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடெங்கும் அதிர்ச்சியலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.. மகளை இழந்து மனம், உடல் இரண்டும் பாதிப்புக்கு ஆளான ஜிஷாவின் தயார் பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்... கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தை பார்க்க பெரும்பாவூர் வந்த ஜெயராம், மருத்துவமனையில் இருந்த ஜிஷாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் தனது படவிழாவில் கலந்துகொண்டு பேசும்போது, தான் நடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தொகையை ஜிஷாவின் தாயாருக்கு நிவாரண நிதியாக வழங்குவதாகவும் அப்போது அறிவித்தார்.. அதன்படி நேற்று மீண்டும் பெரும்பாவூர் வந்து மருத்துவமனையில் ஜிஷாவின் தாயாரை சந்தித்த ஜெயராம், அவருக்கு உதவித்தொகையாக 2 லட்ச ரூபாயை வழங்கினர். ஜிஷா குடியிருந்த வீடு பாதுகாப்பற்ற சாதாரண வீடாக இருந்ததும் கூட, ஜிஷாவிற்கு தன்னை காப்பற்றிக்கொள்ள முடியாமல் போக காரணமாக அமைந்தது.. அதனால் ஜிஷாவின் தயார் அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு நல்ல வீடு கட்டிக்கொள்வதற்காக இந்த தொகையை வழங்கியுள்ளார் ஜெயராம்.