ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள மாநிலத்தில் சோலார் பேனல் ஊழல் மூலம் புகழ்பெற்றவர் சரிதா நாயர். கேரள காங்கிரஸ் அரசை ஆட்டம் காண வைத்தவர். போலீஸ், கோர்ட், சிறை என்று பிசியாக இருந்தாலும் இப்போது நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில குறும்படங்களில் நடித்த சரிதா நாயர், தற்போது வைய்யாவெலி என்ற படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார். காப்ரே டான்சராக இருந்து போலீசாக வளர்ந்து தாதாக்களை வேட்டையாடும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர சுரேஷ் கோபியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தன் சொந்த கதையில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கனலி என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இது ஒரு பேய் படம். சில நகர்புறத்து இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் ஒரு மலைவாழ் பெண் பேயாக வந்து அவர்களை பழிவாங்குகிற கதை. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் சரிதான நாயர்.