ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உள்ளம் உருகுதய்யா..., அமைதியான நதியினிலே ஓடம்..., எங்கே நிம்மதி..., இரண்டு மனம் வேண்டும்..., கண் போன போக்கிலே..., ஒளிமயமான எதிர்காலம்..., பொன் எழில் பூத்தது புது வானில்.... என காலத்தால் அழியாத பல ஆயிரம் பாடல்களை தந்தவர் டிஎம் சவுந்திரராஜன். தேன் கலந்த குரலால் தெவிட்டாத பாடல்கள் பல தந்த இவர் இந்த மண்ணை விட்டு மறைந்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டது. அவரைப்பற்றிய நினைவலைகளை நேற்று பகிர்ந்து இருந்தோம்.
இந்நிலையில் டி.எம்.எஸ்.ன் வாரிசுகளில் ஒருவரான மகன் பால்ராஜ் நம்மிடம் பேசும்போது கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைத்தார். அவர் பேசும்போது, என் அப்பா எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து வைத்துள்ளார். எங்களுக்கு என்று ஒன்றும் வேண்டாம். இருந்தாலும் இந்த அரசுக்கு ஒரு வேண்டுகோள், நாங்கள் தற்போது சென்னை, மந்தைவெளியில் மேற்கு சர்குலர் சாலையில் வசித்து வருகிறோம். இந்த சாலைக்கு என் அப்பாவின் பெயரான டிஎம்எஸ்.,-ஐ வைக்க வேண்டும் என்பதே எனது மற்றும் எங்களின் குடும்பத்தின் ஆசை என்று கூறினார்.
டிஎம்எஸ்., குடும்பத்தாரின் இந்த ஆசையை தமிழக அரசு ஏற்குமா.?