ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் அந்தா, இந்தா என்று ஒருவழியாக இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிம்பு. அப்போது, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார்.
அவர் பேசியதாவது... ''இது நம்ம ஆளு படம், சிம்புவின் வழக்கமான படம் போன்று இருக்காது. சண்டைக்காட்சிகள் இல்லாமல் நான் நடித்த முதல்படம் இது. இந்தப்படம் பார்க்கும் இளைஞர்கள் எல்லோரும் சிம்பு போன்றும், பெண்கள் எல்லோரும் நயன்தாரா போன்றும் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். நயன்தாரா இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். எதிர்காலத்தில் நல்ல கதைகள் அமைந்தால் நயன்தாராவுடன் தொடர்ந்து நடிப்பேன் என்றவரிடத்தில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த சிம்பு, இதற்கான பதிலை ஆண்டவன் பார்த்துக் கொள்வார். நம் கையில் ஒன்றுமில்லை, நடக்க வேண்டிய நேரத்தில் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.