ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வளைகுடா நாடான பஹ்ரைனில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பஹ்ரைன் வளர்ச்சிக்கான தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டி பலரும் பேசினர். இந்திய தூதரக அதிகாரிகளும் மற்றவர்களும் கவுரவிக்பட்டனர். சமூக நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 2016- 18ம் ஆண்டிற்கான புதிய குழு பொறுப்பேற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரவானா, சுதர்சன் செல்வராஜ், நடன ஆசிரியர் ரோகித், நடிகை வந்தனா, கன்னல் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பல்வேறு நடிகர்களைப்போல் வேடம் அணிந்து, பின்னணி பாடகர் சரவணன் பாடிய பாடல்கள், நிகழ்வின் முத்தாய்ப்பாக விளங்கின. ரபிக் தலைமையிலான இசைக்குழுவினர் தங்கள் திறமையைக் காட்டினர். டிவி நடிகை ஸ்ருத்திகா, பாடகி சுஜாதா, பாரதி சங்க பாடகர் ஜாபர் சாதிக் ஆகியோருடைய பாடல்களும், பால் நிகழ்த்திய குழல் இசையும் சிறப்பாக இருந்தது.