ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரசிகர் மன்றம் என்றால் ஆண்கள் மட்டும் தான் நடத்த வேண்டுமா..? பெண்களுக்கு அந்த உரிமைகூட இல்லையா..? இருக்கு என நிரூபித்து காட்டியுள்ளார்கள் கேரள மாநில இளம்பெண்கள்.. அதிலும் முதன்முதலாக ஒரு மலையாள நடிகருக்கு பெண்கள் ரசிகை மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அந்த பாக்கியசாலி நடிகர் துல்கர் சல்மான் தான். என்ன ஒன்று ஆண் ரசிகர்களைபோல கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் பண்ணுவது, பட்டாசு கொளுத்தி, பேப்பர்களை கிழிப்பது இவற்றை மட்டும் தான் இவர்கள் பண்ணவில்லை..
இந்த தைரியசாலி பெண்கள் அனைவரும் கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவில் உள்ள பெருமட்டம் பகுதியை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் 'DQ GIRLS' என்கிற வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்த இவர்கள், இப்போது அதை துல்கர் ரசிகர் மற்றும் நற்பணி மன்றம் ஆக மாற்றிவிட்டார்கள். சமீபத்தில் மூவாட்டுப்புழாவில் வெளியான துல்கரின் 'கழி' படத்திற்கு தங்களது மன்றம் சார்பில் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்து அசத்திவிட்டனர் இந்த ரசிகைகள்.