ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் அதே பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது. தெலுங்கில் போக்கிரி படம் 2006 ஏப்ரல் 28ல் திரைக்கு வந்தது. போக்கிரி திரைக்கு வந்து 10வது வருடத்தை கொண்டாடும் விதமாக பூரி ஜெகன்நாத் மீண்டும் மகேஷ் பாபுவுடன் இணையும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நேற்று(ஏப்ரல் 28) வெளியிட்டார். இப்படத்திற்கு பூரி ஜெகன்நாத் “ஜன கண மன” என பெயரிட்டுள்ளார்.
டுவிட்டரில் பூரி ஜெகன்நாத் வெளியிட்டுள்ள “ஜன கண மன” போஸ்டரில் மகேஷ் பாபு ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருக்கின்றார். மேலும் போக்கிரியை விட இப்படத்தில் மகேஷ் பாபு ஆக்ரோஷமாக இருப்பார் என்றும் பூரிஜெகன் நாத் கூறியுள்ளார். தற்போது பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் படத்தை முடித்த பின்னர் ஜன கண மன படத்தில் மகேஷ் பாபு நடிப்பார் என கூறப்படுகின்றது.